ஆன்மிகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 10-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்புக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

தினத்தந்தி

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாத பகல் பத்துதிருவிழா நடைபெற்று வருகிறது. விழாவினை முன்னிட்டு தினமும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இந்தநிலையில் வருகிற 10-ந் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 7 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் கோவில் நிர்வாகம் சார்பில் தீவிரமாக நடந்து வருகின்றன.

இன்று (திங்கட்கிழமை) பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் நடைபெறுகிறது.

இதையொட்டி திருமுக்குளம் எண்ணெய் காப்பு நீராட்டு உற்சவ மண்டபம் தயார் நிலையில் உள்ளது. தினமும் ஆண்டாளுக்கு மார்கழி எண்ணெய் காப்பு நீராட்டு உற்சவம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து