ஆன்மிகம்

ராமேசுவரம் கோவிலில் 26-ந் தேதி முழுவதும் நடை திறப்பு

மாசி மகாசிவராத்திரியான வருகிற 26-ந் தேதி முழுவதும் ராமேசுவரம் கோவில் நடை திறந்திருக்கும்.

தினத்தந்தி

ராமநாதபுரம்,

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 5-ம் நாளான நேற்று காலை ராமநாத சுவாமி, பர்வத வர்த்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் தங்க பல்லக்குகளில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். தொடர்ந்து இரவு 8 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் காட்சி தந்தனர்.

திருவிழாவின் 6-ம் நாளான இன்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும், 7-ம் நாளான நாளை மாலை 4 மணிக்கு தங்க பல்லக்கில் முத்தங்கி சேவை அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். முக்கிய நிகழ்ச்சியாக 9-ம் நாள் விழாவும், சிவராத்திரி தினமான வருகிற 26-ந் தேதி (புதன்கிழமை) காலை தேரோட்டமும், இரவில் வெள்ளி தேரோட்டமும் நடக்கிறது.

அன்றைய தினம் சிவராத்திரி என்பதால் அன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது பகல் மற்றும் இரவு முழுவதும் சாத்தப்படாமல் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து