ஆன்மிகம்

திருமலையில் ரத சப்தமி விழா கோலாகலம்- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

காலை 9 மணி முதல் 10 மணி வரை சின்னசேஷ வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருமலை:

திருமலையில் மினி பிரமமோற்சவம் என்று அழைக்கப்படும் ரத சப்தமி விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. ஒரே நாளில் 7 வாகனங்களில் மலையப்பசாமி மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது, இந்த விழாவின் சிறப்பு ஆகும்.

அதன்படி, காலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளினார். 9 மணி முதல் 10 மணி வரை சின்னசேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும், மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்திலும் மாட வீதிகளில் மலையப்பசாமி வலம் வந்து அருள் பாலிக்கிறார்.

தொடர்ந்து மதியம் 2 மணி முதல் 3 மணி வரை சக்கர ஸ்நானம், மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகனத்திலும், 6 மணி முதல் 7 மணி வரை சர்வபூபால வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனத்திலும் உலாவருகிறார்.

மலையப்ப சாமி வலம் வரும் மாட வீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. 

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது