ஆன்மிகம்

சேலம் சுகவனேஸ்வரர் கோவில் வைகாசி விசாகப் பெருவிழா: ஜூன் 1-ம் தேதி கொடியேற்றம்

வைகாசி விசாகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா ஜூன் 9-ம் தேதி நடைபெறும்.

தினத்தந்தி

சேலம் சுகவனேஸ்வரர் கோவில் வைகாசி விசாக பெருவிழா 1-ந் தேதி காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு பூத வாகனத்தில் அம்மன் புறப்பாடு நடக்கிறது. தினமும் காலையில் 8.30 மணிக்கு பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.

2-ந் தேதி இரவு 7 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் புறப்பாடு நடக்கிறது. 3-ந்தேதி இருதலைப்பட்சி வாகனத்திலும், 4-ந்தேதி நாக வாகனத்திலும் புறப்பாடு நடக்கிறது. 5 -ந் தேதி மாலை 4 மணிக்கு திருக்கல்யாணம், பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, வெள்ளி ரிஷப வாகன காட்சி நடக்கிறது. 6-ந் தேதி யானை வாகனத்திலும், 7-ந் தேதி கைலாச வாகனத்திலும், 8-ந் தேதி குதிரை வாகனத்திலும் அம்மன் புறப்பாடு நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 9-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் தீபாரதனை வழிபாடு நடக்கிறது. அதனைத் தொடர்ந்து 7 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருள்கிறார். காலை 9 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. தேரோட்ட நிகழ்வில் அமைச்சர் ராஜேந்திரன், மேயர் ராமச்சந்திரன், கலெக்டர் பிருந்தாதேவி, செல்வகணபதி எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள், இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து