ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்... பக்தி பரவசத்துடன் பக்தர்கள் வழிபாடு

‘கோவிந்தா’ முழக்கத்துடன் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

தினத்தந்தி

திருச்சி,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் 7-ம் நாளான வியாழக்கிழமை, மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு வந்து நெல்லளவு கண்டருளினார்.8-ம் நாளான நேற்று காலை வெள்ளிக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்தார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். அவர்கள் 'கோவிந்தா'ரங்கா... ரங்கா... என்ற முழக்கத்துடன் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.  

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து