ஆன்மிகம்

திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

முக்கிய விழாவான தேரோட்டம் 7-ந் தேதி இரவு 7 மணிக்கு நடக்கிறது.

தினத்தந்தி

திருத்தணி,

திருத்தணி முருகன் கோவில் பிரசித்தி பெற்ற 5-ஆம் படை திருத்தலமாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை பெருவிழா நாளை (புதன்கிழமை) காலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி 2-ந் தேதி காலை வெள்ளி சூரிய பிரபை வாகனத்திலும் இரவு பூத வாகனத்திலும், 3-ந் தேதி காலை சிம்மவாகனத்திலும் இரவு ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், 4-ந் தேதி காலை பல்லக்கு சேவை உற்சவமும் இரவு வெள்ளி நாக வாகனத்திலும், 5-ந் தேதி காலை அன்ன வாகனத்திலும் இரவு வெள்ளி மயில் வாகனத்திலும், 6-ந் தேதி மாலை 4:30 மணிக்கு புலி வாகனத்திலும் இரவு 7 மணிக்கு யானை வாகனத்தில் காட்சியளிக்கிறார்.

முக்கிய விழாவான தேரோட்டம் 7-ந் தேதி இரவு 7 மணிக்கு நடக்கிறது. 8-ந் தேதி காலை யாலி வாகனத்திலும் தொடர்ந்து இரவு குதிரை வாகனம், தெய்வயானையம்மை திருக்கல்யாணம் நடக்கிறது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து