ஆன்மிகம்

வாரம் ஒரு திருமந்திரம்

அணுவின் இயக்கம் பற்றியும், இறைவனே அணுவாக இருப்பது பற்றியும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தன்னுடைய பாடல்களில் கூறியிருக்கிறார் திருமூலர்.

தினத்தந்தி

இவர் இயற்றிய திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை

அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு

அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு

அணுவில் அணுவை அணுகலும் ஆமே.

விளக்கம்:- அணுவிற்குள் அணுவாகவும், அதற்கு அப்பாலும் இருப்பவர் இறைவன். அப்படி அணுவிற்குள் அணுவாய் உள்ளதை ஆயிரம் கூறு செய்து, அந்த ஆயிரத்தில் ஒரு கூறினை நெருங்கும் வல்லமை கொண்டவர்களுக்கு, அணுவிற்குள் அணுவாய் இருக்கின்ற இறைவனையும் அணுக முடியும்.

(உயிர் என்று சொல்லப்படும் ஆன்மாவை, ஆயிரம் கூறுகளாக்கி கிடைப்பது இறைவனின் வடிவம் என்கிறார் திருமூலர்)

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்