ஆன்மிகம்

வாரம் ஒரு திருமந்திரம்

திருமூலர் என்னும் மாமுனியால் பாடப்பட்ட திருமந்திர நூல், சைவ நெறிகளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது.

தினத்தந்தி

இதில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:

இசைந்து எழும் அன்பில் எழுந்தபடியே

பசைந்து எழும் ஈசரைப் பாசத்துள் ஏகச்

சிவந்த குருவந்து சென்னிகை வைக்க

உவந்த குருபதம் உள்ளத்து உவந்ததே.

விளக்கம்:

இறைவன் திருவடி நம் உள்ளத்தில் பொருந்துவதால், அதில் அன்பு ஊற்றெடுக்கும். அந்த அன்பினால் இறைவன் நமக்கு மேலும் நெருக்கமாய் ஒன்றிப்போவார். அந்த நிலையில் சிவபெருமான், குருவாக எழுந்தருளி, நம் தலை மீது கைவைத்து அருள்வா. அதனால் இறைவன் திருவடி நம் உள்ளத்தில் பொருந்தும்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து