புதுச்சேரி

புதுவை போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா

புதுவை போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது.

தினத்தந்தி

புதுச்சேரி

நாட்டில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுவை மாநிலத்திலும் இந்த உத்தரவை பின்பற்றி அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த அரசு டெண்டர் விட்டது. முதல் கட்டமாக உருளையன்பேட்டை, ஒதியஞ்சாலை ஆகிய போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன் பின்னர் மற்ற போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது.

இங்கு பொருத்தப்படும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை அந்தந்த போலீஸ் நிலையங்களில் பார்க்க முடியாது. ஆனால் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீஸ் சித்ரவதைக்கு எதிரான கமிட்டி அலுவலகத்தில் இருக்கும் கட்டுப்பாட்டு அறையில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து