புதுச்சேரி

கார் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

மூலக்குளம் அருகே கார் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

மூலக்குளம்

மேட்டுப்பாளையம் மருத்துவமனை வீதியை சேர்ந்தவர் சுதர்சனன் (வயது 51). தனியார் நிறுவன ஊழியர். நேற்று இரவு தனது காரை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்மநபர் திடீரென கார் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டார்.

இதை தட்டிக்கேட்ட சுதர்சனுக்கு அந்த நபர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அந்த நபரை பிடித்து மேட்டுப்பாளையம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் சாணரப்பேட்டையை சேர்ந்த இசக்கி (வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்