சினிமா செய்திகள்

அமலாக்கத்துறை விசாரணை போதை மருந்து வழக்கில் நடிகர் ராணா ஆஜர்

அமலாக்கத்துறை விசாரணை போதை மருந்து வழக்கில் நடிகர் ராணா ஆஜர்.

தினத்தந்தி

தெலுங்கு பட உலகில் போதை பொருள் புழக்கம் இருப்பதாக எழுந்த புகாரில் போதை பொருள் தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி தெலுங்கு சினிமா துறைக்கு நெருக்கமான 11 பேர் உள்பட 30 பேரை கைது செய்தனர்.

போதை பொருள் வழக்கில் ஹவாலா பணம் கைமாறியது தெரிய வந்ததால் அமலாக்கத்துறையும் தனியாக விசாரணை நடத்தி தெலுங்கு நடிகைகள் உள்பட திரையுலகை சேர்ந்த 12 பேருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது.

இதையடுத்து நடிகைகள் சார்மி, ரகுல்பிரீத் சிங், டைரக்டர் பூரி ஜெகன்நாத், நடிகர் நந்து ஆகியோர் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் சம்மன் அனுப்பி இருந்ததால் அவர் நேற்று காலை ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகள் முன்னால் நேரில் ஆஜரானார்.

போதை பொருள் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்று அவரிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். ராணா பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார். தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். தமிழில் அஜித் குமாருடன் ஆரம்பம் மற்றும் காடன், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்