சினிமா செய்திகள்

மூத்த நடிகர்களை அவமதித்ததாக எதிர்ப்பு: மன்னிப்பு கேட்ட பாலகிருஷ்ணா

மூத்த நடிகர்களை அவமதித்ததாக எதிர்ப்புகள் வலுத்ததை தொடர்ந்து தனது பேச்சுக்கு பாலகிருஷ்ணா மன்னிப்பு கேட்டுள்ளார்.

தினத்தந்தி

என்.டி.ராமராவின் மகனும் பிரபல தெலுங்கு நடிகருமான பாலகிருஷ்ணா சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த வீரசிம்மா ரெட்டி படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் பேசும்போது மறைந்த பழம்பெரும் நடிகர்களான எஸ்.வி.ரங்காராவை, அந்த ரங்காராவ் இந்த ரங்காராவ் என்றும் அக்கினேனி நாகேஸ்வரராவை அக்கினேனி தொக்கினேனி என்றும் பேசியது சர்ச்சையை கிளப்பியது.

நாகேஸ்வரராவின் பேரன்களான நடிகர்கள் நாக சைதன்யா, அகில் ஆகியோர் பாலகிருஷ்ணா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். எஸ்.வி.ரங்காராவ் பற்றி இழிவாக பேசியதற்காக பாலகிருஷ்ணா வீட்டு முன்னால் முற்றுகையிடுவோம் என்று சில அமைப்புகள் அறிவித்தன.

இதையடுத்து தனது பேச்சுக்கு பாலகிருஷ்ணா மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் கூறும்போது, "நான் நாகேஸ்வரராவ், எஸ்.வி.ரங்காராவ் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். நாகேஸ்வரராவை என் சித்தப்பா போலவே பார்த்தேன். அவர் மகன்களை விட என்னிடம்தான் மிகவும் அன்பாக இருப்பார். அது வாய் தவறி வந்த வார்த்தைகளே தவிர அவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. யாரையாவது புண்படுத்தும்படி என் பேச்சு இருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்