மும்பை

பன்வெலில் சரக்கு ரெயில் பாதை அமைக்கும் பணி; பேலாப்பூர்- பன்வெல் இடையே மின்சார ரெயில் சேவை ரத்து

பன்வெலில் சரக்கு ரெயில் பாதை அமைக்கும் பணி நடப்பதால் பேலாப்பூர்- பன்வெல் இடையே 38 மணி நேரம் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மும்பை, 

பன்வெலில் சரக்கு ரெயில் பாதை அமைக்கும் பணி நடப்பதால் பேலாப்பூர்- பன்வெல் இடையே 38 மணி நேரம் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரெயில் சேவை ரத்து

பன்வெல் பகுதியில் சரக்கு ரெயில்களுக்கு என தனியாக 2 வழித்தடம் அமைக்கும் பணி இன்று (சனிக்கிழமை) இரவு 11 மணி முதல் திங்கட்கிழமை மதியம் 1 மணி வரை நடக்கிறது. பணி நடைபெறும் 38 மணி நேரம் பேலாப்பூர் - பன்வெல் இடையே துறைமுகம், டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் ரெயில் சேவை ரத்து செய்யப்படும் என மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது. சி.எஸ்.எம்.டி. - வாஷி, நெருல், பேலாப்பூர் இடையே மட்டுமே துறைமுக வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்படும். டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் தானே - நெருல், வாஷி இடையே இயக்கப்படும்.

நாளை மறுநாள் மதியம் சேவை தொடங்கும்

பன்வெலுக்கு கடைசி மின்சார ரெயில் இன்று இரவு 9.02 மணிக்கு சி.எஸ்.எம்.டி.யில் இருந்து புறப்படும். பன்வெலில் இருந்து இரவு 10.35 மணிக்கு சி.எஸ்.எம்.டி.க்கு கடைசி ரெயில் கிளம்பும். அதன்பிறகு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மதியம் 12.08 மணிக்கு தான் முதல் ரெயில் சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பன்வெலுக்கு இயக்கப்படும். பன்வெலில் இருந்து மதியம் 1.37 மணிக்கு முதல் ரெயில் சி.எஸ்.எம்.டி.க்கு இயக்கப்படும். இதேபோல பணிகள் முடிந்து நாளை மறுநாள் மதியம் முதல் தான் டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் தானே-பன்வெல் இடையே மின்சார ரெயில்கள் இயக்கப்படும். இந்த தகவலை மத்திய ரெயில்வே தெரிவித்து உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்