புதுச்சேரி

தொழில் முனைவோர் பயிற்சி

புதுவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டது.

தினத்தந்தி

புதுச்சேரி

இந்தியன் வங்கி, புதுச்சேரி கருணாலயம் கிராம சங்கம், எனேபிள் இந்தியா நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவு விழாவுக்கு கருணாலயம் கிராம நலச்சங்க தலைவர் அங்காளன் தலைமை தாங்கினார். எனேபிள் இந்தியா நிறுவன புதுவை அலுவலர் ஆல்ரிங் டார்விஸ், விமல்ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

விழாவில் இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் அமிர்தவல்லி, புதுவை மாநில மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழக இயக்குனர் சாந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர். முன்னதாக கருணாலயம் சங்க இணை இயக்குனர் புஷ்பவள்ளி வரவேற்றார். முடிவில் விஸ்வநாதன் நன்றி கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்