மும்பை

அன்னிய செலாவணி மோசடி வழக்கு: அனில் அம்பானி மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை

அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக தொழில் அதிபர் அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

தினத்தந்தி

மும்பை, 

அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக தெழில் அதிபர் அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

அன்னிய செலாவணி மோசடி

ரிலையன்ஸ் ஏ.டி.ஏ. குழும அதிபர் அனில் அம்பானிக்கு எதிராக அமலாக்கத்துறை அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அனில் அம்பானிக்கு வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள் மற்றும் முதலீடு தொடர்பாக இந்த விசாரணை நடந்து வருகிறது. அன்னிய செலாவணி வழக்கு விசாரணைக்கு நேற்று முன்தினம் அனில் அம்பானி ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

மனைவியிடம் விசாரணை

இந்தநிலையில் நேற்று அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. விசாரணைக்காக, அவர் நேற்று காலை தென்மும்பை பல்லர்டு எஸ்டேட் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வந்தார். அவரிடம் வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள் மற்றும் முதலீடுகள் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கருப்பு பணம் பதுக்கிய வழக்கில் வருமான வரித்துறை அனில் அம்பானி மற்றும் அவரது மனைவிக்கு வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள், முதலீடுகள் பற்றி விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்