மும்பை

நாசிக்கில் லஞ்ச வழக்கில் ஜி.எஸ்.டி. அதிகாரி கைது

நாசிக்கில் லஞ்ச வழக்கில் ஜி.எஸ்.டி. அதிகாரி கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

மும்பை,

நாசிக்கில் லஞ்ச வழக்கில் ஜி.எஸ்.டி. அதிகாரி கைது செய்யப்பட்டார்.

ஜி.எஸ்.டி. அதிகாரி லஞ்சம்

நாசிக் மண்டல ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் சீனியர் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் சந்திரகாந்த் சவான்கே. இவர் ஜி.எஸ்.டி. சலுகை கேட்டு விண்ணப்பித்தவரிடம் இருந்து ரூ.8 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக புகார் வந்தது. இதுகுறித்து சி.பி.ஐ.யிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவத்தன்று ஜி.எஸ்.டி. அலுவலகம் சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள், லஞ்சம் வாங்கிய போது அதிகாரி சந்திரகாந்த் சவான்கேயை கையும், களவுமாக பிடித்தனர்.

ரூ.2.37 லட்சம் பறிமுதல்

மேலும் அதிகாரிகளின் அலுவலகத்தில் இருந்த ரூ.37 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் ஜி.எஸ்.டி. அதிகாரி சந்திரகாந்த் சவான்கேயை கைது செய்தனர்.

மேலும் அவரின் வீட்டில் சோதனை நடத்தி ரூ.2 லட்சம் மற்றும் சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்