மாவட்ட செய்திகள்

தலைமை காவலர் மனைவி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

தலைமை காவலர் மனைவி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

தாமரைக்குளம்,

அரியலூர் அண்ணாநகரை சேர்ந்தவர் பரமசிவம். அரியலூர் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக இருந்த இவர், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு இவரது மனைவி மைதிலி, வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டக்கோவில் கூத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் அண்ணாதுரையை (வயது 40) கைது செய்து, விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து சென்ற போது அவர் தப்பி சென்றார். இந்நிலையில், அண்ணாதுரை சென்னையில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அரியலூர் போலீசார் நேற்று முன்தினம் சென்னை சென்று அண்ணாதுரையை கைது செய்து அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்