மாவட்ட செய்திகள்

பாக்ஸ்கான் தொழிற்சாலை வளாகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை நிறைவு

பாக்ஸ்கான் தொழிற்சாலை வளாகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை நிறைவு பெற்றது.

தினத்தந்தி

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இயங்கி வரும் பாக்ஸ்கான் தொழிற்சாலை வளாகத்தில் எம்.ஐ. செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் வரி ஏய்ப்பு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சென்னையில் இருந்து வந்த வருமான வரித்துறையினர் 20 பேர் அடங்கிய குழுவினர் கடந்த 21-ந்தேதி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனை நேற்று நிறைவுபெற்றது. இதில் முக்கிய ஆவணங்கள் கிடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாக்ஸ்கான் தொழிற்சாலை பெண் ஊழியர்கள் தங்கி இருந்த உணவு விடுதியில் தரமற்ற உணவு வழங்கியது தொடர்பாகவும், தரமற்ற உணவு சாப்பிட்ட ஊழியர்கள் 8 பேர் இறந்து போனதாக வெளியான வதந்தியையடுத்து பெண் தொழிலாளர்கள் சுங்குவார்சத்திரம் அருகே விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்