மாவட்ட செய்திகள்

வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தர்ணா

கம்பத்தில் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி, பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தர்ணாவில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

கம்பம்:

கம்பம் நகராட்சியில் 4-வது வார்டுக்கு உட்பட்ட ஐசக் போதகர் தெருவில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த பகுதியில் குடிநீர் வசதி, கழிவுநீர் வாய்க்கால் வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பட்டா வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி, வீடுகளில் கருப்புகொடி ஏற்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, தாசில்தார் அர்ச்சுணன், நகராட்சி பொறியாளர் பன்னீர்செல்வம் மற்றும் ஊழியர்கள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாசில்தார் கூறுகையில், தற்போது தேர்தல் நடைமுறை அமலில் உள்ளதால் பட்டா வழங்குவது குறித்து உறுதி வழங்க முடியாது.

தேர்தல் முடிந்தவுடன் பட்டா வழங்குவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது உள்ளபடியே தார்சாலை அமைக்கப்படும் என்றார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்