மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதியதில் என்ஜினீயரிங் மாணவர் சாவு

ஆம்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தினத்தந்தி

ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மின்னூர் ஊராட்சி ரயில்வே ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார் (வயது 22), என்ஜினீயரிங் படித்து வந்தார். இவர், மின்னூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை மோட்டார் சைக்கிளில் கடந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் திடீரென மதன்குமார் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயரிழந்தார்.

இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்