திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த திருவூர் ராம்நகரை சேர்ந்தவர் பழனி (வயது 38). கொத்தனார். இவருக்கு அஞ்சாயிரம் (32) என்ற மனைவியும், பாலாஜி (12), வெங்கடேசன் (9) என்ற 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு இருந்து வந்தது.
அதைத்தொடர்ந்து கோபித்துக்கொண்ட அஞ்சாயிரம் தனது மகன்களுடன் தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
தற்கொலை
நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பழனி தன்னுடைய மனைவி மற்றும் மகன்கள் இல்லாத ஏக்கத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.