மாவட்ட செய்திகள்

வல்லூர் அனல் மின் நிலைய தொழிலாளர்களுக்கு கபசுர குடிநீர்

வல்லூர் அனல் மின் நிலைய தொழிலாளர்களுக்கு கபசுர குடிநீர் தி.மு.க. சார்பில் வழங்கப்பட்டது.

தினத்தந்தி

மீஞ்சூர்,

கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதை தடுக்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சரும் தி.மு.க.தலைவருமான முக.ஸ்டாலின் பொதுமக்களுக்கு முககவசம் வழங்குதல், கபசுர குடிநீர் வழங்கும் பணிகள் ஆகியவற்றை வழங்க தி.மு.க.வினரை கேட்டுக்கொண்டார். அதன்படி திருவள்ளூர் மாவட்டம் அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் தலைமையில் தொ.மு.ச.வின் அனல்மின் நிலைய தலைவர் எம்.எஸ்.கே.சீனிவாசன் முன்னிலையில் தொழிலாளர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. அப்போது நிர்வாகிகள் சிம்சன், அருண்குமார், கோபி, ஏசுராஜா, மதன், செல்வம் உட்பட பலர் உடனிருந்தனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்