மாவட்ட செய்திகள்

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.6¼ லட்சம் தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து மங்களூருவுக்கு கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

மங்களூரு: தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேயில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் துபாயில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகள், அவரது உடைமைகளை சுங்கவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது அதே விமானத்தில் வந்திறங்கிய ஒரு பயணியின் நடவடிக்கையில் சுங்க வரித் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பயணி, அவரது உடைமைகளை சுங்க வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.

அதில், அந்த பயணி கொண்டு வந்த பார்சல்களுக்கு நடுவே மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 127 கிராம் எடையுள்ள தங்கத்தை, சுங்கவரித்துறையினர் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.6.27 லட்சம் ஆகும். விசாரணையில் அவர் கேரள மாநிலம் காசர்கோடுவை சேர்ந்த பயணி என்பதும், துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர், பஜ்பே போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டார். அதன்பேரில் அவரை, பஜ்பே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்