மாவட்ட செய்திகள்

இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பதவிக்கான தேர்வை 1,749 பேர் எழுதினர்

தர்மபுரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பதவிக்கான தேர்வை 1,749 பேர் எழுதினர்.

தினத்தந்தி

தர்மபுரி,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை கிரேடு- 3 பணிக்கான தேர்வுகள் தர்மபுரி மாவட்டத்தில் 10 மையங்களில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 2,948 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 1,749 பேர் தேர்வை எழுதினார்கள். தேர்வு எழுதுவோர் எந்தவிதமான முறைகேட்டிலும் ஈடுபடாமல் தடுக்க பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களில் கேமராக்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-வது நாளாக இந்த தேர்வு நடக்கிறது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்