மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டத்தில், தேசிய திறனாய்வு தேர்வை 2 ஆயிரத்து 993 பேர் எழுதினர்

தேனி மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வை மாணவ-மாணவிகள் 2 ஆயிரத்து 993 பேர் எழுதினர்.

தினத்தந்தி

தேனி,

பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைவழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான தேசிய திறனாய்வு தேர்வு நேற்று நடைபெற்றது.

தேனி மாவட்டத்திலும் நேற்று தேசிய திறனாய்வு தேர்வு நடந்தது. இதற்காக மாவட்டத்தில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் உத்தமபாளையத்தில் 3 தேர்வு மையங்களும், பெரியகுளத்தில் 3 தேர்வு மையங்களும், தேனியில் 5 தேர்வு மையங்கள் என மொத்தம் 11 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. மாணவ-மாணவிகள் தேர்வு எழுதும் மையங்களுக்கு காலை 8.30 மணிக்கு வரத்தொடங்கினர்.

மாவட்டத்தில் திறனாய்வு தேர்வு எழுதுவதற்கு மாணவ-மாணவிகள் 3 ஆயிரத்து 243 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 2 ஆயிரத்து 993 பேர் நேற்று தேர்வை எழுதினர். 250 பேர் தேர்வு எழுத வரவில்லை.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்