கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா 
மாவட்ட செய்திகள்

பசுவதை தடை சட்டத்தால் காநாடகத்தில் பால் உற்பத்தி, தோல் தொழில் கடுமையாக பாதிக்கும்; சித்தராமையா பேட்டி

பசுவதை தடை சட்டத்தால் கர்நாடகத்தில் பால் உற்பத்தி மற்றும் தோல் தொழில் கடுமையாக பாதிக்கும் என்று சித்தராமையா கூறினார்.

தினத்தந்தி

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மூடப்படும் அபாயம்

கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டத்தை அவசர சட்டமாக அரசு கொண்டு வந்துள்ளது. சட்டசபை, மேல்-சபையில் விவாதிக்காமல் இந்த சட்டத்தை இந்த அரசு கொண்டு வந்துள்ளது. அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பால் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளன. இந்த அவசர சட்டத்தால் விவசாயத்துறை பெரிய அளவில் பாதிக்கும். பால் உற்பத்தி குறையும்.

கர்நாடகத்தில் 42 லட்சம் குடும்பங்கள் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. பசுவதை தடை அவசர சட்டத்தால் பால் உற்பத்தி மற்றும் தோல் தொழில் கடுமையாக பாதிக்கும். நாம் பயன்படுத்தும் காலணிகள், பெண்கள் பயன்படுத்தும் கைப்பைகள் போன்றவை தோலால் தான் செய்யப்படுகிறது. இந்த அவசர சட்டத்தால் தோல் தொழில்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேடுவது சரியல்ல

புதிய வகை கொரோனா பரவல் விஷயத்தில் மக்களிடையே உள்ள பயத்தை அரசு போக்க வேண்டும். இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களை நடமாட விட்டுவிட்டு, தேடுவது சரியல்ல. அவர்கள் வருவதற்கு முன்பே விமான நிலையத்தில் பரிசோதனை செய்து தனிமைப்படுத்தி இருக்க வேண்டும். தர்மேகவுடாவை பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் கட்டாயப்படுத்தி மேலவை தலைவர் இருக்கையில் அமர வைத்தனர். அவருக்கு அதில் விருப்பம் இருக்கவில்லை.

ஆனால் இந்த விஷயத்தில் குமாரசாமி கூறும் கருத்துகளுக்கு நான் பதிலளிக்க மாட்டேன். அவர் பொய் பேசுகிறார்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்