மாவட்ட செய்திகள்

மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் உதவி

கொடைக்கானலில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை செஞ்சிலுவை சங்கத்தினர் வழங்கினர்.

தினத்தந்தி

கொடைக்கானல்:

கொடைக்கானல் பகுதியில் கொரோனா நோயாளிகளுக்கு போதிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் வசதி கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனை நிர்வாகம் தங்களுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கும்படி செஞ்சிலுவை சங்கத்திற்கு கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து செஞ்சிலுவை சங்கம் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பில் கொடைக்கானலில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 16 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிக்கு 8 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு செஞ்சிலுவை சங்க கிளை தலைவரும், முன்னாள் நகரசபை தலைவருமான டாக்டர் கே.சி.ஏ.குரியன் ஆபிரகாம் தலைமை தாங்கினார்.

அரசு தலைமை மருத்துவர் பொன்ரதி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ. சிவக்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் ஆகியோர் கலந்துகொண்டு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கி பேசினர்.

நிகழ்ச்சியில் செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் தாவுது, நாட்ராயன், அப்பாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்