மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல், விலை உயர்வுக்கு எதிர்ப்பு வாகனங்களை எரிக்கும் போராட்டத்துக்கு அனுமதி கேட்டு போலீசில் மனு

பெட்ரோல், டீசல், விலை உயர்வுக்கு எதிர்ப்பு வாகனங்களை எரிக்கும் போராட்டத்துக்கு அனுமதி கேட்டு போலீசில் மனு.

தினத்தந்தி

செங்கல்பட்டு,

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் வருகிற 1-ந்தேதி வாகனங்களை தீயிட்டு எரித்து போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் செங்கல்பட்டு டவுன் போலீசில் மனு வழங்க சென்றனர். போலீசார் மனுவை வாங்க மறுத்தனர். தொடர்ந்து மனுவை தபால் மூலம் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைப்பதாக கூறிவிட்டு அவர்கள் சென்றனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளுக்கு நாள் பல்வேறு கோணங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் நாம் தமிழர் கட்சியினர் செங்கல்பட்டில் வாகனங்களை தீயிட்டு எரிக்கும் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்