மாவட்ட செய்திகள்

மனுநீதிநாள் முகாம்

பரந்தூர் ஊராட்சியில் மனுநீதிநாள் முகாம் நடந்தது.

தினத்தந்தி

வாலாஜாபாத்,

வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட பரந்தூர் ஊராட்சியில் மனுநீதிநாள் முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார். முகாமில் 24 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு, 35 பேருக்கு பழங்குடியினர் உறுப்பினர் அடையாள அட்டை, 14 பயனாளிகளுக்கு இருளர் இன சான்று, 12 பேருக்கு ஆதரவற்றோர் விதவை சான்று, 4 பேருக்கு சிறு விவசாயி சான்று, சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 46 பேருக்கு முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இதில் காஞ்சீபுரம் எம்.பி. மரகதம் குமரவேல், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் பா.கணேசன், வி.சோமசுந்தரம், காஞ்சீபுரம் வருவாய் கோட்ட அதிகாரி க.ராஜூ, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் நாராயணன், வேளாண்மை துறை இணை இயக்குனர் கோல்டி பரேமாவதி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரி மாலதி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்