மாவட்ட செய்திகள்

பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை

கோவையில் பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

கோவை

கோவை விளாங்குறிச்சி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரகு (வயது 40). இவருடைய மகள் நாகேஸ்வரி (17). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி பள்ளி முடிந்து மாலை 6 மணிக்கு நாகேஸ்வரி வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. இதை பெற்றோர் கண்டித்தனர்.

இதில் மனமுடைந்த அவர் வீட்டில் உள்ள அறைக்கு சென்று, அன்று இரவு சாணி பவுடரை தண்ணீரில் கலந்து குடித்துவிட்டு, தனது சகோதரிக்கு போன் செய்து தான் விஷம் குடித்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து உடனடியாக அவர், நாகேஸ்வரி பெற்றோரிடம் தெரிவித்தார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த நாகேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்