மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் அருகே ரூ.37 கோடி அரசு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

காஞ்சீபுரம் அருகே ஏரி பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த ரூ.37 கோடி அரசு ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

தினத்தந்தி

காஞ்சீபுரம்,

ஐகோர்ட்டு உத்தரவின்படி தமிழகம் முழுவதும் ஆறு, ஏரி, குளம், உள்ளிட்ட நீர் ஆதாரங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்கும் பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.அதன்படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் நீர்நிலை ஆதாரங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்டெடுக்கும் பணிகள் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி அவர்களின் உத்தரவின்படி நாள்தோறும் நடைபெற்று வருகிறது. காஞ்சீபுரம் தாலுக்காவிற்கு உட்பட்ட வதியூர், முட்டவாக்கம், பெரும்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.

இந்த ஆக்கிரமிப்புகளை காஞ்சீபுரம் ஆர்.டி.ஓ. ராஜலட்சுமி தலைமையில் காஞ்சீபுரம் தாசில்தார் பிரகாஷ் பொதுப்பணித்துறை பொறியாளர் மார்க்கண்டேயன் மற்றும் வருவாய்த்துறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வதியூர் ஏரியில் கிராமத்தில் 50 ஏக்கரும், முட்டவாக்கம் ஏரியில் 25 ஏக்கரும், பெரும்பாக்கம் ஏரியில் 60 ஏக்கரும் என மொத்தம் ரூ.37 கோடி மதிப்பிலான 135 ஏக்கர் ஏரி புறம்போக்கு நிலங்களை பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் மீட்டு எடுத்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்