மாவட்ட செய்திகள்

செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது

காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூர் தாலுகா அலுவலகத்தில் மதுராந்தகம் ஆர்.டி.ஓ. மாலதி தலைமையில் வட்டாட்சியர் செந்தில்குமார் முன்னிலையில் ஜமாபந்தி தொடங்கியது.

தினத்தந்தி

மதுராந்தகம்,

இதில் புதிய குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, முதியோர், விதவை உதவித்தொகை என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 141 மனுக்கள் பெறப்பட்டு 25 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் 16 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 102 மனுக்கள் நிலுவையில் உள்ளன.

இதில் ஆர்.டி.ஓ. வின் நேர்முக உதவியாளர் வேல்முருகன், தனி வட்டாட்சியர் செல்வசீலன், மண்டல துணை வட்டாட்சியர் சக்திவேல், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ராஜா, தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் புட்டியப்பன், தலைமையிடத்து நிலஅளவையர் லோகநாதன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்