மாவட்ட செய்திகள்

சேலத்தில் மாநில கராத்தே போட்டி; 450 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

450 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

தினத்தந்தி

புதோகாய் கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை கராத்தே பயிற்சி பள்ளி தலைமை ஆசிரியர் கெபிராஜ் தொடங்கி வைத்தார். போட்டியில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் உள்பட 17 மாவட்டங்களில் இருந்து 450 மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

கராத்தே போட்டி 8 வயதுக்கு உட்பட்டோர், 10 வயதுக்கு உட்பட்டோர், 12 மற்றும் 14, 18 ஆகிய வயதுக்கு உட்பட்டோர் என பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர்கள் ராமன், மணிகண்டன், சங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்