மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசுவதை பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த பள்ளி மாணவிகள் மீட்பு

செல்போனில் பேசுவதை பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த பள்ளி மாணவிகள் மீட்கப்பட்டனர்.

தினத்தந்தி

திருவொற்றியூர்,

சென்னை திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் பகுதியில் 8-ம் வகுப்பு படிக்கும் 2 சிறுமிகள் உள்ளனர். இவர்கள் ஆன்லைன் வகுப்பிற்கு வாங்கி கொடுத்த செல்போனில் அதிகம் நேரம் பேசுவதை அவர்களது பெற்றோர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த 2 சிறுமிகளும் திடீரென வீட்டை விட்டு ஓட்டம் பிடித்ததில், மாயமாகி விட்டனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில், திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மணலி புதுநகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் அருகே 2 சிறுமிகள் சுற்றித்திரிவதை கண்டனர். இதையடுத்து போலீசார் சிறுமிகளை மீட்டு, அறிவுரை கூறி பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்