மாவட்ட செய்திகள்

குன்றத்தூரில் செல்போன் பறிப்பு; 2 பேர் கைது

குன்றத்தூரில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் தனியாக நடந்து செல்பவர்களிடம் செல்போன் பறிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது. இதையடுத்து குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான தனிப்படையினர் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர்கள் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்கள்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது அவர்கள் குன்றத்தூர், நந்தம்பாக்கத்தை சேர்ந்த அருண்குமார் (வயது 20), யோகலிங்கம் (24), என்பது தெரியவந்தது. இவர்கள் இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்பவர்களிடம் செல்போன்களை பறித்து சென்றது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள், ஒரு மோட்டார்சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்