மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் தயார் நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அதிகாரிகள் ஆய்வு

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் தயார் நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தினத்தந்தி

பொன்னேரி,

திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மாதவரம், திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளது. இதில் பொன்னேரி (தனி) தொகுதியின் 310 வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட உள்ளது.

பொன்னேரி தொகுதிக்கான 310 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பொன்னேரியில் உள்ள தமிழ்நாடு மீன்வள கல்லூரியில் போலீஸ் பாதுகாப்புடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு மையங்களில் எந்திரங்கள் பழுது ஏற்பட்டால் உடனடி தேவைக்காக 53 எந்திரங்கள் கூடுதலாக பெறப்பட்டுள்ளது. பொன்னேரி (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆர்.டி.ஓ.வுமான நந்தகுமார் வாக்குப்பதிவு எந்திரங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது தாசில்தார் புகழேந்தி, துணை தாசில்தார்கள் செல்வகுமார், மதிவாணன், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்