மாவட்ட செய்திகள்

பெண் உள்பட 2 பேர் சிக்கினர்

செம்பட்டி அருகே ஸ்கூட்டரில் கஞ்சா கடத்திய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

திண்டுக்கல் :

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே லட்சுமிபுரம் குதிரை கோவில் என்னுமிடத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும்படி ஸ்கூட்டரில் வந்த ஒரு வாலிபரையும், அவருடன் வந்த பெண்ணையும் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து அவர்கள் வந்த ஸ்கூட்டரை பாலீசார் சோதனை செய்தனர்.

அதில் ஸ்கூட்டரின் இருக்கைக்கு கீழ் 1 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சாவையும், ஸ்கூட்டரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், அவர்கள் சித்தையன்கோட்டை அருகே சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த செல்வம் மனைவி கவிப்பிரியா (வயது 30), அவருடைய உறவினர் பரத் (20) என்றும், அவர்கள் கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிப்பிரியா, பரத் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்