மாவட்ட செய்திகள்

பெரியபாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி

பெரியபாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார்.

தினத்தந்தி

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் அரியபாக்கம் காலனியை சேர்ந்தவர் ரவி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி சசி என்ற சசிகலா (வயது 45). இவர் பெரியபாளையம் பகுதியில் பக்தர்களுக்கான வேப்பஞ்சேலை கட்டும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பெரியபாளையத்தில் இருந்து அரியபாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

பெரியபாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது பின்னால் வந்த டிப்பர் லாரி ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி கிழே விழுந்த சசிகலா லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே மகன் கண் எதிரே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். சசிகலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். தலைமறைவான லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்