செய்திகள்

டெல்லியில் விவசாயிகள் போராட்டம்: ஹைட்ரோகார்பன் திட்ட ஒப்பந்த நகலை எரித்ததால் பரபரப்பு

டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில், ஹைட்ரோகார்பன் திட்ட ஒப்பந்த நகலை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஓ.என்.ஜி.சி. மற்றும் வேதாந்தா ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் அகில இந்திய போராட்டத்துக்காக டெல்லி சென்ற விவசாயிகளில் சிலர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் கைவிட வலியுறுத்தி நேற்று காலை டெல்லி சாஸ்திரி பவனில் உள்ள பெட்ரோலியத்துறை அமைச்சகம் முன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்த நகலை தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்