தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளால் மூன்று காவலர்கள் கடத்திக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மூன்று காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில், கப்ரான் கிராமத்தில் இருக்கும் காவலர்கள் வீட்டுக்குச் சென்ற பயங்கரவாதிகள், அவர்களை கடத்தி சென்றனர். கடத்தப்பட்ட காவலர்கள் ஃபிர்தவுஸ் அஹ்மத் குச்சே, குல்தீப் சிங், நிசார் அஹ்மத் தோபி மற்றும் ஃபயாஸ் அஹ்மத் பட் என்று தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், கடத்திச்செல்லப்பட்ட 4 காவலர்களில் 3 பேர் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஒரு காவலர் மட்டும் உள்ளூர் மக்களின் உதவியோடு மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. காவல்துறை பணியில் இருந்து விலக வேண்டும் என்று பயங்கரவாதிகள், காவலர்களை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

சமீப காலமாக காஷ்மீரில் பயங்கரவாதிகள் தங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் தடுமாறி வருகின்றனர். கல்வீச்சு சம்பவங்கள், போராட்டமும் குறைந்துள்ளதால், விரக்தி அடைந்த பயங்கரவாதிகள், காவல்துறையினரை குறிவைத்துள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார். இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வரும் நிலையில், காஷ்மீரில் பயங்கரவாதிகள் வெறிச்செயல் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்