தேசிய செய்திகள்

வைர வியாபாரி மெகுல் சோக்சிக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்க சி.பி.ஐ. மனு

மெகுல் சோக்சிக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

தினத்தந்தி

மும்பை,

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரத்து 500 கோடி மோசடியில் ஈடுபட்டதாக வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டு அங்குள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் பெல்ஜியம் நாட்டில் மெகுல் சோக்சி கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நாடு கடத்தும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் கனரா வங்கியில் ரூ.55.27 கோடி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக மெகுல் சோக்சிக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் மெகுல் சோக்சிக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்க மும்பை சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ. மனுதாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிபதி வி.பி. தேசாய் குறிப்பிட்ட வழக்கு தொடர்பாக சிறப்பு கோர்ட்டு விசாரிக்க முடியாது எனக்கூறினார். மேலும் மனுவை மாஜிஸ்திரேட்டு கோட்டு விசாரிக்க அனுப்பி வைத்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்