தேசிய செய்திகள்

அத்துமீறி நுழைந்த வழக்கில் டெல்லி சபாநாயகருக்கு 6 மாதம் சிறை

அத்துமீறி நுழைந்த வழக்கில் டெல்லி சபாநாயகருக்கு 6 மாதம் சிறைதண்டனை வழங்கப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லி சட்டமன்ற சபாநாயகர் ராம்நிவாஸ் கோயல் (வயது 72). டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய நாளான 2015-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந் தேதி கோயல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 3 பேர் மணீஷ்காய் என்ற கட்டுமான அதிபர் வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்க மதுபாட்டில்கள், போர்வைகள் போன்ற பொருட்களை பதுக்கிவைத்திருப்பதாக கூறி அத்துமீறி நுழைந்து சோதனை நடத்தினர். இதுதொடர்பாக கோயல் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட்டு, கோயல் உள்பட 4 பேருக்கும் 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்தார். மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த தண்டனை விதிப்பதாக கூறிய அவர், ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்வதற்காக ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்