தேசிய செய்திகள்

அமெரிக்க கடற்படை தளபதியுடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

இந்தியாவிற்கு வந்துள்ள அமெரிக்க கடற்படை தளபதியை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

அமெரிக்க இந்தோ-பசிபிக் கடற்படை தளபதி ஜான் அகிலினோ, 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. டெல்லியில் நேற்று அவரை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.

இந்தோ-பசிபிக் பிராந்திய நிகழ்வுகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் இச்சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பு குறித்து பேசிய கடற்படை தளபதி ஜான் அகிலினோ, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எங்கள் நட்பு நாடுகள் எங்களது மிகப்பெரிய பலமாக விளங்குகிறது. இந்தியவுடனான எங்கள் உறவு சீரமைக்கப்பட்ட மதிப்புகள் மற்றும் நீடித்த கூட்டாண்மையின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஒற்றுமையாக இருக்கும் போது நமது வலிமை அதிகரிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்