தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்டார் அரியானா முதல்மந்திரி

அரியானா முதல்மந்திரி மனோகர் லால் கட்டார் இன்று கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்டார்.

சண்டிகர்,

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 21 கோடியே 60 ஆயிரத்து 46 ஆயிரத்து 638 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அரியானா முதல்மந்திரி மனோகர் லால் கட்டார் கடந்த ஏப்ரல் 30 ந் தேதி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டார்.

இந்நிலையில், அரியானா முதல்மந்திரி மனோகர் லால் கட்டார் கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் இன்று போட்டுக்கொண்டார். சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் இன்று போட்டுக்கொண்டார்.

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு