தேசிய செய்திகள்

ஓடும் ரெயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய ரெயில்வே போலீஸ்...!

ஐதராபாத் அருகே பேகும்பேட் ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் ஏற முயன்று, தவறி விழுந்த பெண்ணை ரெயில்வே பாதுகாப்பு பெண் போலீஸ் ஒருவர் காப்பாற்றினார்.

தினத்தந்தி

ஐதராபாத்,

ஐதராபாத் பேகம்பேட் ஸ்டேஷனில் ஓடும் ரெயிலில் ஏற முயன்ற பெண் பயணியின் உயிரை ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆர்பிஎப்) பெண் கான்ஸ்டபிள் காப்பாற்றினார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவத்தின் அந்த வீடியோவில், கான்ஸ்டபிள் குமாரி சனிதா என்பவர் ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையிலான இடைவெளியில் ஒரு பெண் பயணி விழுவதைக் கண்டு விரைந்து செயல்படுவதைக் காணலாம். கான்ஸ்டபிளுக்கு மற்றொரு பயணி உதவுவதை வீடியோ காட்டுகிறது.

இறுதியாக பெண் பயணியை கான்ஸ்டபிள் காப்பாற்றினார். வீடியோவை பார்த்த பலரும், கான்ஸ்டபிள் சனிதாவை பாராட்டி வருகிறார்கள். இது தொடர்பான காட்சியின் சிசிடிவி காட்சிகளை ட்வீட் செய்த ரயில்வே பாதுகாப்பு படை. "ஒரு கேடயம் போல் செயல்பட்ட குமாரி சனிதாவுக்கு வாழ்த்துக்கள்" என்று ஆர்பிஎஃப் தெரிவித்துள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்