தேசிய செய்திகள்

ஜோதிர் ஆதித்ய சிந்தியா இன்று ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைவதாக தகவல்

ஜோதிர் ஆதித்ய சிந்தியா இன்று மதியம் 12.30 மணியளவில், ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியில் கடந்த சில நாட்களாக குழப்பம் நிலவி வந்தது. மூத்த தலைவரான கமல்நாத் முதல்-மந்திரி பதவியையும், மாநில கட்சி தலைவர் பதவியையும் வகித்து வருகிறார். அவரிடம் இருந்து கட்சி தலைவர் பதவியை கைப்பற்ற இளம் தலைவரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா முயற்சித்தாலும், மேலிடம் அசைந்து கொடுக்கவில்லை.

நேற்று முன்தினம் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 17 பேருடன் மாயமானதாக தகவல்கள் வெளிவந்தன. இதனால் கமல்நாத் அரசுக்கு ஆபத்து உருவானது. இதையடுத்து நேற்று ஒரு திடீர் திருப்பமாக ஜோதிர் ஆதித்ய சிந்தியா, காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், ஜோதிர் ஆதித்ய சிந்தியா இன்று மதியம் 12.30 மணியளவில், ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்