தேசிய செய்திகள்

பத்திரிகைகளின் குரல்வளையை நெரிப்பவர்களை மோடி அரசு கடுமையாக எதிர்க்கிறது: அமித் ஷா

பத்திரிகைகளின் குரல்வளையை நெரிப்பவர்களை மோடி அரசு கடுமையாக எதிர்க்கிறது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தேசிய பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தொடங்கப்பட்ட நாளான நவம்பர் 16 ஆம் தேதி இந்தியா முழுவதும் தேசிய பத்திரிகையாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்துகள். நமது மாபெரும் தேசத்தின் அஸ்திவாரங்களை வலுப்படுத்த நம்முடைய ஊடக சகோதரத்துவம் அயராது உழைத்து வருகிறது.

பத்திரிகைகள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டுமென்பதில் மோடி அரசு உறுதி பூண்டுள்ளது. அதேநேரம் அதன் குரல்வளையை நெரிப்பவர்களைக் கடுமையாக எதிர்க்கிறது. கொரோனா காலங்களில் ஊடகங்களின் குறிப்பிடத்தக்க பங்கை நான் பாராட்டுகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்