தேசிய செய்திகள்

குதிரை பேரத்தில் ஈடுபட வேண்டாம்; தேவேந்திர பட்னாவிசுக்கு ஆர்.எஸ்.எஸ். அறிவுறுத்தல்

ஆட்சி அமைப்பதற்காக குதிரை பேரத்தில் ஈடுபட வேண்டாம் என்று தேவேந்திர பட்னாவிசுக்கு ஆர்.எஸ்.எஸ் அறிவுறுத்தியுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மராட்டியத்தில் ஆட்சி அமைப்பதில் குழப்பமான அரசியல் சூழல் நிலவி வருகிறது. இந்தநிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் அதன் தலைவர் மோகன் பகவத்தை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து பேசினார்.

அப்போது, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைத்தால் விட்டுவிடுங்கள். எதிர்க்கட்சியாக இருக்கவும் தயாராக இருக்க வேண்டும். ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மையை பெறுவதற்காக குதிரை பேரம் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.

அதேபோல சிவசேனா இல்லாமல் ஆட்சி அமைக்க வேண்டாம் எனவும் மோகன் பகவத் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்