தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் விரைவில் முடிவுக்கு வரும் - மத்திய மந்திரி சொல்கிறார்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் விரைவில் முடிவுக்கு வரும் என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

ஹமிர்பூர்,

இமாசலபிரதேச மாநிலம் ஹமிர்பூரில் மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி அனுராக் தாகூர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டமானது மக்களுக்கானது என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். காங்கிரசும், இடதுசாரிகளும் இந்த போராட்டங்களுக்கு பின்னால் இருக்கிறார்கள். மக்களால் புறக்கணிக்கப்பட்டு ஆட்சி பீடத்துக்கு வருவதில் தோல்வி அடைந்து ஓட்டுக்காக மக்களை அவர்கள் திசை திருப்புகிறார்கள். பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை நியாயமானது மற்றும் மக்களுக்கானது என்பதை மக்கள் உணர்ந்ததும் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்கள் விரைவில் முடிவுக்கு வரும். இந்த சட்டம் லட்சக்கணக்கான மக்களுக்கு நன்மை அளிக்கும். சிறுபான்மையினருக்கு தீங்கு விளைவிக்கும் என்பது தவறானது ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்