தேசிய செய்திகள்

ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

ஜே.இ.இ. தேர்வை எழுத இருந்தநிலையில் கடும் மனஉளைச்சலுக்கு மாணவர் ஆளாகியுள்ளார்.

தினத்தந்தி

கோட்டா,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் உஜ்வால் மிஸ்ரா (வயது 18). ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள பயிற்சி நிலையத்தில் சேர்ந்து 2 ஆண்டுகளாக ஜே.இ.இ. தேர்வுக்கு படித்து வந்துள்ளார். அதே பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்துள்ளார். நாளை (புதன்கிழமை) நடக்கவுள்ள ஜே.இ.இ. தேர்வை எழுத இருந்தநிலையில் கடும் மனஉளைச்சலுக்கு உஜ்வால் ஆளாகியுள்ளார்.

இந்தநிலையில் மாலை 6 மணியளவில் விடுதி அறையில் இருந்து உஜ்வால் மிஸ்ரா வெளியேறினார். கோட்டா ரெயில் நிலையம் நோக்கி சென்ற அவர் ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். உஜ்வால் மிஸ்ராவின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்